Published : 04 Apr 2018 05:18 PM
Last Updated : 04 Apr 2018 05:18 PM
சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியுள்ளதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார்.
11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவது குறித்தும், சிஎஸ்கே தடைக்கு பின்னர் திரும்பி உள்ளது குறித்தும் அவ்வணிக்காக 2008 முதல் 2013 வரை விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அல்பி மார்கல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐபிஎல் இந்த வாரம் தொடங்குகிறது. சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளதைக் காண ஆவலாக இருக்கிறேன் பல சிறந்த நினைவுகளுடன்” என்று பதிவிட்டுள்ளார்.
அல்பி மோர்கலின் இந்த ட்வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்டு , “நன்றி, தொடர்ந்து விசில் அடியுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT