Published : 30 Mar 2018 09:18 PM
Last Updated : 30 Mar 2018 09:18 PM

கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்து மனம் உடைந்த 9 வயது ரசிகர்: ஸ்டீவ் ஸ்மித் மன்னிப்பு மெசேஜ்

வியாழக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஸ்டீவ் ஸ்மித் அழுத காட்சியினால் காட்சிகள் தற்போது மாறியுள்ளன. ஸ்டீவ் ஸ்மித்துக்கு அதிகபட்ச தண்டனை என்று பலரும் அவருக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தின் தீவிரமான 9 வயது ரசிகர் ஒருவர் மனம் உடைந்து போனார். இவர் பெயர் டார்சி, சேனல் 9 ரிப்போர்ட்டர் தெபோரா நைட்டின் மகன் ஆவார்.

தன் ஆதர்சமான ஸ்டீவ் ஸ்மித் பந்து சேத சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டது, அவர் கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட காட்சியும் தன் மகனை நிலைகுலையச் செய்துவிட்டது என்று தெபோரா நைட் தன் ட்வீட்டரில், “என் 9 வயது மகன் ஸ்டீவ் ஸ்மித்தின் மிகப்பெரிய விசிறி. அன்று செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் அழுததைப் பார்த்து மனம் உடைந்து விட்டான். 20 நிமிடங்கள் அவனை ஆறுதல் படுத்த வேண்டியதாயிற்று” என்று டீவிட் செய்ய இது நூற்றுக்கணக்கான முறை மறு பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தெபோரா நைட்டுக்கு ஸ்மித்திடமிருந்து நேரடியாக மெசேஜ் வந்தது. அதில், “எனக்காக என் சார்பில் உங்கள் மகனிடம் மன்னிப்பு கேளுங்கள், அவரையும் நான் ஏமாற்றியுள்ளேன் என்பதை நினைத்து வருந்துகிறேன்” என்று மெசேஜ் செய்துள்ளார்.

இதனை வெகுவாகப் பாராட்டிய தெபோரா நைட், தன் மகனுக்கு இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் விளக்கி வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என்றும் தவறு செய்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதோடு, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோரை மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x