Last Updated : 30 Mar, 2018 05:55 PM

 

Published : 30 Mar 2018 05:55 PM
Last Updated : 30 Mar 2018 05:55 PM

நீங்கள் கண்ணீர் விடுவதை உலகம் பார்க்க விரும்பியது: மனமுடைந்த ஸ்மித்துக்கு அஸ்வின் ஆறுதல்

ஸ்மித் கண்ணீர் விட்டு அழுது தவறுக்கு மன்னிப்பு கேட்டதையடுத்து முன்பு மனதார தண்டனை கிடைக்க வேண்டுமென்று விரும்பியவர்களெல்லாம் திடீரென மனமாற்றம் அடைந்துள்ளனர்.

ஸ்மித்தின் கண்ணீருக்கு அவ்வளவு பலம் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் கம்பீர் அளவுக்கு தீவிர நிலைப்பாடு எடுத்து ஸ்மித்துக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லையென்றாலும் தமிழக வீரரும் இந்திய ஆஃப் ஸ்பின்னரும், கிங்ஸ் லெவன் கேப்டனுமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்மித்துக்கு தன்னளவில் ஆறுதலாக ட்வீட் செய்துள்ளார்.

“இந்த உலகம் நீங்கள் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்க்க விரும்பியது, நீங்கள் கண்ணீர் விட்டீர்கள் அல்லவா இனி அவர்கள் திருப்தியுடன் நிம்மதியாக வாழ்க்கையைவாழ்வார்கள். பரிவிரக்கம் என்பது வெறும் வார்த்தையல்ல மக்களிடம் இன்னமும் ஈரம் உள்ளது. உங்களுக்கும் பேங்க்ராப்டுக்கும் கடவுள் வலுவைத் தருவார்.

டேவிட் வார்னருக்கும் இதனை எதிர்த்துப் போராட வலு தேவைப்படும், அவர்கள் நாட்டு வீரர்கள் சங்கம் அவர்களுக்கான உதவிகளைச் செய்யும் என்று நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x