Published : 18 Mar 2018 04:25 PM
Last Updated : 18 Mar 2018 04:25 PM
இந்தியாவுடனான இறுதிப் போட்டிக்கு உத்வேக அளவில் தங்கள் அணி முன்னணியில் இருப்பதாகக் கூறிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், இந்திய அணி சிறந்ததொரு அணி என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.
“இந்தியா சிறந்ததொரு அணி, ஆனால் எங்கள் அணியிடம்தான் உத்வேகம் உள்ளது. எனவே இலங்கைக்கு எதிரான அதே ஆட்டத்தைத் தொடருவோம் என்று நம்புகிறேன்.
இந்தியாவிடம் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததையடுத்து நாங்கள் அதைப்பற்றி விவாதிக்கவில்லை, அழுத்தம் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை, அழுத்தம் பற்றி யோசித்தால்தான் அது அழுத்தமாக மாறும். அதைப்பற்றியே நினைக்கவில்லை எனில் பிரஷர் கிடையாது.
வீரர்கள் அனைவரும் கவலைப்படாமல் இருக்கின்றனர். இதே மனநிலையில் களமிறங்கினால் நல்லது. எங்கள் அணியில் யாருக்கும் மனத்தடை என்பது இல்லை. அதுதான் எங்களை நன்றாக ஆட வைக்கிறது. இந்தியாவுக்கு எதிராக இது மிகப்பெரிய இறுதிப் போட்டி என்று நினைத்தால் அடுத்த நிமிடம் அழுத்தம் நமக்கு சுமையாக மாறும்.
தொழில்நுட்ப உதவியினால் இந்திய வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை ஓரளவுகுத் தெரிந்து வைத்துள்ளோம். அனுபவசாலிகள் அவர்களுக்குக் களத்தில் வசதியாக விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுப்போம். நன்றாக்த் தொடங்கி அதே நிலையைத் தக்க வைக்க வேண்டும்” இவ்வாறு கூறினார் ஷாகிப்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT