Published : 18 Mar 2018 03:16 PM
Last Updated : 18 Mar 2018 03:16 PM
வெள்ளியன்று நடைபெற்ற முத்தரப்பு டி20 கடைசி லீக் போட்டியில் வங்கதேச வீரர்கள் நோ-பால் கொடுக்காத சர்ச்சையைத் தொடர்ந்து மோசமாகவே நடந்து கொண்டனர் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வருத்தத்துடன் ஒப்புக் கொண்டுள்ளது.
போட்டியில் வென்று வங்கதேசம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும் அவர்கள் நடத்தை தெருவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் தரத்தை விடவும் குறைவாக இருந்தது, இதனையடுத்து வங்கதேச கிரிக்கெட்டுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இதனையத்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறுஜ்போது, “வங்கதேச வீரர்களின் நடத்தையை வ.தேச கிரிக்கெட் வாரியம் வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறது, கிரிக்கெட் களத்தில் இது எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஆட்டத்தின் முக்கியத்துவத்தினால் இவ்வாறு நடந்திருக்கலாம், ஆனாலும் எதிர்பார்த்த அளவு தொழில்பூர்வமாக அணி வீரர்கள் நடந்து கொள்ளவில்லை.
வங்கதேச வீரர்களுக்கு பொறுப்பை நினைவூட்டுகிறோம், கிரிக்கெட் ஆட்டத்தின் மாண்பையும் உணர்வையும் பாதுகாக்குமாறு அறிவுறுத்துகிறோம்” என்று மன்னிப்பு தொனியில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT