Published : 23 Feb 2018 03:23 PM
Last Updated : 23 Feb 2018 03:23 PM
தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது டி20 போட்டியில் இறுதி ஓவரில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த தோனி மணிஷ் பாண்டேவுன் சற்று சீற்றமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் கிளாசன், டுமினி ஆகியோரது ஆட்டத்தினால் இந்தியாவின் 188 ரன்களை வெற்றிகரமாக அடைந்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி கண்டது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரெய்னா, மணிஷ் பாண்டே, தோனி சிறப்பாக விளையாடினர். குறிப்பாக தோனி - மணிஷ் பாண்டே கூட்டணி 56 பந்துகளில் 98 ரன்களைச் சேர்த்தனர்.
ஆட்டத்தின் 19 வது ஓவரில் முதல் பந்தை தோனி களத்தில் பந்தை எதிர் கொண்டு இருந்த போது மணிஷ் பாண்டேவை நோக்கி சீற்றமாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோவின் விவரம்:
தோனி பந்தை அடிக்க தயாராகி கொண்டிருக்கிறார். கடைசி ஓவர் என்பதால் அணிக்கு எப்படியாது ரன்களை சேர்த்துவிட வேண்டும் என்று குறியாக இருந்த தோனி, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மணீஷ் பாண்டேவே நோக்கி "ஓய்...... எங்கு பார்த்து கொண்டு இருக்கிறாய். இங்கே பாரு ஏன் அங்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய். நான் பேட்டிங்கின் முடிவில் நிற்கிறேன்" என்று சீற்றமாக பேசினாஎர்.
இதனைத் தொடர்ந்து வந்த பந்துகளை தோனி சிக்கர்களாகவுகம், பவுண்டிரிகளகாவும் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களால் கேப்டன் கூல் என்று அறிப்படும் தோனியின் இந்த கோபம் அவரது ரசிகர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT