Published : 20 Feb 2018 03:27 PM
Last Updated : 20 Feb 2018 03:27 PM
உலகின் மிகச்சிறந்த டி20 இடது கை ஸ்பின்னரான நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடுகிறார். இவரை ரூ.50 லட்சத்துக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடுவது குறித்து மிட்செல் சாண்ட்னர் கூறியதாவது:
வலையில் தோனிக்கு நான் பந்து வீசப்போவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். போட்டியில் வீசுவதை விட வலையில் அவருக்கு வீசுவதுதான் நல்லது.
சென்னை அணியின் பண்பாட்டுடன் இணையக் காத்திருக்கிறேன். தோனி, ரெய்னா, ஜடேஜா, ஆகியோருடன் இணைந்து விளையாடும் ஒரு அற்புதமான சூழலுக்காகக் காத்திருக்கிறேன்.
சென்னை அணியின் குடும்பத்தில் இணைய ஆர்வமிகுதியாக இருக்கிறேன். உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது திறமைகளைக் காட்டி சென்னை அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ய ஆர்வமாக இருக்கிறேன்.
இந்தியாவில் 3 வடிவங்களிலும் ஆடியிருக்கிறேன், இங்கு ஓரளவுக்கு நன்றாகவும் வீசி வெற்றியடைந்துள்ளேன். இந்தியாவில் மகிழ்வுடன் பந்து வீசலாம் காரணம் ஸ்பின்னர்களுக்குப் பிட்ச் சாதகமாக இருக்கும்.
இவ்வாறு கூறினார். ஏப்ரல் 7 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT