Published : 18 Feb 2018 05:13 PM
Last Updated : 18 Feb 2018 05:13 PM
கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார்
சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார்.
அதன்பின் கிர்மாணி பேசுகையில், “ ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் விளையாட்டில் செய்த சாதனைகளை குறிப்பிட்டு சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஜாம்பவானாக உருவாகுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
இந்தியாவின், தமிழகத்தின் பெருமையாக அஸ்வின் திகழ்கிறார். விளையாட்டில் அஸ்வின் செலுத்தும் அர்ப்பணிப்பும், அவரின் சாதனைகளும் இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
கிரிக்கெட்டில் உள்ள ஏராளமான ஜென்டில்மென்களுக்கு இடையே மிகச்சிறந்த மனிதர் அஸ்வின். அஸ்வினின் புகழுக்கு இந்தவிருது மேலும் புகழ்சேர்க்கும் என நம்புகிறேன் “ எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT