Last Updated : 16 Feb, 2018 10:02 AM

 

Published : 16 Feb 2018 10:02 AM
Last Updated : 16 Feb 2018 10:02 AM

நன்றாக ஆடிய போதும் என்னை அணியிலிருந்து நீக்கியது காயப்படுத்துகிறது: சுரேஷ் ரெய்னா வருத்தம்

இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரியில் ரெய்னா ஆடியதோடு சரி, அதன் பிறகு சர்வதேசப் போட்டிகளில் ரெய்னா இடம்பெறுவதில்லை. விராட் கோலியின் நீக்கு, தூக்கு கொள்கையின் படி இவரும் தூக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் நன்றாக ஆடிய போதும் அணியிலிருந்து தூக்குவது தனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்துவதாக சுரேஷ் ரெய்னா வருத்தமடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரெய்னா மீண்டும் நீல உடையில் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நன்றாக ஆடும் போதும் அணியிலிருந்து நீக்கப்படுவது என்னை பெரிதும் காயப்படுத்துகிறது. இப்போது யோ-யோ டெஸ்டிலும் வெற்றிபெற்றுள்ளேன், மேலும் வலுவாக உணர்கிறேன். இந்தக் காலக்கட்டத்தில் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்ட போது இந்திய அணிக்காக மீண்டும் ஆடும் ஆசை வலுவாகத் துளிர்விட்டுள்ளது.

நான் இத்துடன் விடப்போவதில்லை, இந்திய அணிக்காக எவ்வளவு காலம் ஆட முடியுமோ அவ்வளவு காலம் ஆட முயற்சி செய்வேன். 2019 உலகக்கோப்பையில் ஆட வேண்டும், ஏனெனில் நான் இங்கிலாந்தில் நன்றகா ஆடியிருக்கிறேன். என்னிடம் பங்களிப்பு செய்ய இன்னும் நிறைய மீதமிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்த 3 டி20 போட்டிகளிலும் மிகச்சிறப்பாக ஆடுவேன் என்று தீவிரமாக நம்புகிறேன்.

4-ம் நிலையில் களமிறங்கி ஆடுவது என்பது சுலபமல்ல, என் பாணி பேட்டிங்குக்கு 4 அல்லது 5-ம் நிலை பொருத்தமாக உள்ளது.

இவ்வாறு கூறினர் சுரேஷ் ரெய்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x