Published : 12 Feb 2018 05:45 PM
Last Updated : 12 Feb 2018 05:45 PM
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் மீது முகம் தெரியாத பார்வையாளர் ஒருவர் நிறவெறி வசையை எய்தியது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கூறியதாவது:
இம்ரான் தாஹிர் சொல்லாலும் நிறத்தாலும் வசைமொழியை எதிர்கொண்டுள்ளார். பார்வையாளர் ஒருவர் இச்செய்கையை செய்துள்ளார். இதனை மைதான பாதுகாப்பு அதிகாரியிடம் தாஹிர் புகார் கூற, அவரை அழைத்துக் கொண்டு நிறவெறி வசை நபரை அடையாளம் காட்ட வைத்து, அந்த நபர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு கூறியுள்ளது.
இது குறித்து முகநூலில் தெளிவற்ற வீடியோ ஒன்று வெளியானது, இதில் தாஹிர் ரசிகர்களிடம் பேசுவது பதிவாகியுள்ளது. அப்போது தாஹிர் கூறியதாக ஓரளவுக்கு புரிந்த வார்த்தை ‘எனக்கும் குடும்பம் இருக்கிறது’ என்ற வாக்கியமே. ஆனால் பல ரசிகர்கள் தாஹிரை ‘மோசமான விளையாட்டு வீரர்’ என்று குற்றம்சாட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இம்ரான் தாஹிர் நிறவெறி வசைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. 2014-ல் ஆஸ்திரேலியாவின் மனுகா ஓவல் மைதான ரசிகர்கள் இம்ரான் தாஹிரை நிறவெறி வசை புரிந்தனர்.
பிறகு 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ரசிகர் ஒருவர் இம்ரான் தாஹிரை நோக்கி, “நீ ஏன் உன் செல்லப்பிராணி ஒட்டகத்தை நீவி விடக் கூடாது?” என்று கேட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT