Published : 10 Feb 2018 01:32 PM
Last Updated : 10 Feb 2018 01:32 PM

மீண்டும் சிஎஸ்கே-வில் வாய்ப்பு: என்ன சொல்கிறார் விஜய்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது சிறப்பான ஒன்று என்று முரளி விஜய் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடக்க சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் பிற அணிகளில் சார்பாக விளையாடினார்.

இந்த நிலையில் ஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான தொடரில் மீண்டும் விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடப்பெற்றிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது குறித்து முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்தில் கூறும்போது, "சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மீண்டும் திரும்பியது சிறப்பானது. உங்கள் ஹோம் க்ரவுண்டில் விளையாடும்போது அது அற்புதமான அனுபவமாக இருக்கும். சென்னை அணியின் மஞ்சள் நிற உடையை அணிந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பதுதான்  முதல் நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2009 - 2013 ஆண்டுவரை ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் 1600 ரன்கள்வரை சேர்த்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x