Published : 27 Jan 2018 04:55 PM
Last Updated : 27 Jan 2018 04:55 PM

டெஸ்ட்டில் நன்றாக வீசுகிறார், ஒருநாள் அணியில் இல்லை: அஸ்வினை எடுக்காதது குறித்து ஸ்டீபன் பிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஏலத்தில் அஸ்வினை நிச்சயம் எடுப்போம் என்று கேப்டன் தோனி கூறியிருந்த நிலையில் இன்று அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தாரை வார்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ரூ.7.6 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது. அஸ்வினும் சென்னை அணிக்கு ஆடிய இனிய நினைவுகளுடன் கிங்ஸ் லெவன் அணிக்கு விளையாடப்போவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருப்பதாவது:

திட்டமிடுவது கடினம். எடுத்துள்ள அனைத்து வீரர்களும் கூடுதல் மதிப்பு சேர்ப்பவர்களே. அயல் நாட்டு வீரர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஆல்ரவுண்டர்களையே பெரிதும் விரும்புகிறோம். அவர்கள் மீது முதலீடு செய்த பணத்திற்கான மதிப்பை அளிப்பார்கள் பிராவோ, வாட்சன் ஆகியோரை அதனால்தான் தேர்வு செய்தோம்.

பன்முகத் திறமை கொண்ட அணியைத் தேர்வு செய்துள்ளோம். இது ஸ்பின் பந்து வீச்சு ஆதிக்க அணி. இதுதான் இன்று உலக கிரிக்கெட்டில் டிரெண்ட். ஹர்பனன் சிங்கை மலிவாக ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளோம். அஸ்வின் பெரிய அளவில் அணிக்குப் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் ஹர்பஜனை எடுத்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக வீசுகிறார். ஆனால் ஒருநாள் போட்டி அணியில் இல்லை, எங்கள் தெரிவு குறித்து மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், திறன் அளவு ஒன்றுதான்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x