Published : 27 Jan 2018 01:19 PM
Last Updated : 27 Jan 2018 01:19 PM
"வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப சந்தோஷம்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்ததுள்ளது
சென்னை அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு" என்று பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் பதிவுக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கல் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT