Published : 17 Jan 2018 11:49 AM
Last Updated : 17 Jan 2018 11:49 AM

தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஆடுகளத்தில் ராகுலுடன் தமிழில் பேசிய விஜய்; வைரலாகும் வீடியோ

தென் ஆப்பிரிக்காவுனான இரண்டாவது இன்னிங்கிஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் அகியோர் களத்தில் விளையாடும்போது தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அவர்களது ஆட்ட யுத்தி புரியாமல் இருப்பதற்காக தமிழிக வீரர் முரளி விஜய் இதனை கையாண்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், ராகுலும் களமிறங்கினர்.

தென் ஆப்பிரிக்காவுடனான  டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் இந்தியா பேட்டிங் வரிசை சற்று தடுமாறிதான் போயுள்ளனர். இதனை நினைவில் கொண்ட தங்களது ஆட்ட உத்தியை தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிந்துக் கொள்ளாத வண்ணம் இருக்க தமிழக வீரர் முரளி விஜய் களத்தில் தனது சக வீரர் ராகுலுடன் தமிழில் உரையாடினார். ராகுல் கர்நாடாகவைச் சேர்ந்தவர்.

இதனைத் தொடர்ந்து முரளி விஜய் ராகுலுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் விஜய், தென்னாப்பிரிக்க அணியின் பந்தை எதிர்கொண்டிருந்த ராகுலை நோக்கி "மெல்ல... மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை )உள்ளதான் போடுறாங்க” என்று கூறுகிறார்.

எனினும் விஜய் 9 ரன்னிலும், ராகுல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2-வது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x