Published : 30 Oct 2017 10:04 AM
Last Updated : 30 Oct 2017 10:04 AM

கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரிஸ் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடினார். வெறும் 35 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸ்ரீகாந்த். இந்த ஆண்டில் அவர் வெல்லும் 4-வது பட்டம் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x