Published : 21 Sep 2017 08:37 PM
Last Updated : 21 Sep 2017 08:37 PM
கொல்கத்தா ஒருநாள் போட்டியில் இந்திய இன்னிங்ஸ் முடியும் தறுவாயில் பாண்டியா பேட் செய்த போது நிகழ்ந்த சம்பவம் சில சர்ச்சைகளைக் கிளப்பி பிறகு அடங்கியது.
ஆட்டத்தின் 48-வது ஓவரில் பாண்டியா ஹை புல்டாஸில் கேட்ச் ஆனார். இதனையடுத்து தான் அவுட் என்று அவர் கிரீஸை விட்டு பெவிலியனுக்கு நடைபோட்டார்.
ஆனால் சாதுரிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ் என்பதால் நோ-பால் மற்றும் நாட் அவுட்டாக இருக்கக் கூடுமென்று பவுலரான கேன் ரிச்சர்ட்சனை அழைத்து ரன்னர் முனையில் ஸ்டம்பைப் பெயர்த்து ரன் அவுட் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இது நடந்து கொண்டிருக்கும் போது சிறு மழையும் பெய்து, வீரர்கள் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஸ்மித் இது ரன் அவுட்தான் என்று நடுவர்களான அனில் சவுத்ரி மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காரணம் பந்து டெட் பால் ஆகவில்லை என்பதே ஸ்மித்தின் தர்க்கம்.
ஆனால் இது நாட் அவுட் என்ற முடிவே அளிக்கப்பட்டது. ஏனெனில் தான் அவுட் என்று நினைத்தே பாண்டியா கிரீசை விட்டு நகர்ந்தார். ரன்னுக்காக அவர் முயற்சி செய்யவில்லை. இதுதான் விதிமுறை 27.7-ம் பிரிவு கூறுகிறது.
நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்த போது இடுப்புக்கு மேல் சென்ற புல்டாஸ் என்று தெரியவந்ததையடுத்து நோ-பால் ஆனது, நோ-பாலாக இருந்தாலும் பந்து டெட் ஆகவில்லை என்பதால் ரன் அவுட் விதிமுறைக்கிணங்கியதுதான் என்பது ஸ்மித் வாதம்.
ஆனால் தான் அவுட் என்றுதான் கிரீசை விட்டு பாண்டியா நகர்ந்தார். இதனால் அவர் கிரீசை மீண்டும் எட்ட முயற்சி செய்யவில்லை. இந்த இடத்தில், பேட்ஸ்மெனுக்கு அவுட் கொடுக்காதபோது நடுவர் தலையிட்டு குறிப்பிட்ட பேட்ஸ்மென் அவுட் என்று நினைத்துதான் வெளியேறினார் என்று முடிவெடுத்து டெட் பால் என்று அறிவிக்க முடியும், ஆகவே பாண்டியா நாட் அவுட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT