Published : 19 Sep 2017 05:56 PM
Last Updated : 19 Sep 2017 05:56 PM
2016 உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் ஏற்பட்ட பகைமையின் நினைவில், நடப்பு ஒருநாள் தொடரில் ‘ஸ்டோக்ஸ் பேசாமல் இருந்தால் நானாக எந்த வசையையும் தொடங்க மாட்டேன்’ என்று மே.இ.தீவுகள் வீரர் மர்லன் சாமுயெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று மே.இ.தீவுகள், இங்கிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மழைகாரணமாக ஆட்டம் தாமதமாகியுள்ளது.
2016-ம் ஆண்டு உலகக்கோப்பை டி20 தொடர் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் கார்லோஸ் பிராத்வெய்ட் 4 சிக்சர்களை வெளுத்துக் கட்டி மே.இ.தீவுகள் சாம்பியன் ஆனபோது மர்லன் சாமுயெல்ஸ் எதிர்முனையில் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அப்போது ஸ்டோக்ஸ் ஒரு பதற்றமான வீரர் என்றார் சாமுயெல்ஸ். இதற்கு முன்பாக ஒருமுறை 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கிரெனடாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சாமுயெஸ்ல் ஸ்டோக்ஸைப் பார்த்து நக்கலாக சல்யூட் செய்தார் .
இவையெல்லாம் சேர்ந்து தற்போது இந்த இருவருக்குமிடையே மோதல் போக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மோர்கன் கூறும்போது, “பென் ஸ்டோக்ஸ் தன் பாணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதுதான் ஸ்டோக்ஸின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும்” என்றார்.
தி கார்டியனில் மர்லன் சாமுயெல்ஸ் கூறும்போது, “இங்கிலாந்தில் நான் நல்ல பெயர் எடுக்கவே வந்திருக்கிறேன். ஸ்டோக்ஸ் பேசாமல் இருந்தால் நானாக எதையும் ஆரம்பிக்கப் போவதில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT