Published : 11 Sep 2017 07:08 PM
Last Updated : 11 Sep 2017 07:08 PM

இப்படி கேட்ச்களை விட்டால் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வெல்ல முடியாது: பயிற்சியாளர் பெய்லிஸ்

கேட்ச்கள் விஷயத்தில் இங்கிலாந்து பீல்டர்கள் முன்னேறவில்லையென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் சாடியுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விட்ட கேட்ச்களின் எண்ணிக்கை 14. “இந்தக் கேட்ச்களில் ஒன்றிரண்டு கடினமான வாய்ப்பாக இருந்தாலும் மீதியெல்லாம் மிகச் சுலபமாகப் பிடித்திருக்க வேண்டிய வாய்ப்புகளே” என்கிறார் பெய்லிஸ்.

“கேட்சிங் பயங்கரமாக இருந்தது, குறிப்பாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மோசம். இப்படிக் கேட்ச்களைக் கோட்டைவிட்டால் ஆஷஸ் தொடரில் நிச்சயம் வெல்ல முடியாது. சுலபமான கேட்ச்களை விடுவது என்பது கவனக்குறைவினால் ஏற்படுவதே.

எப்போதுமே கேட்சிங் மீது கவனம் செலுத்திக் கொண்டேயிருக்கிறோம். முக்கியமான தொடர்களில் மட்டுமல்ல. இது ஏமாற்றமளிக்கிறது. பயிற்சி இன்மையால் இது ஏற்படவில்லை.

கடினமாக உழைத்து நன்றாக கேட்ச்களை எடுக்கிறோம் திடீரென ஒரு தொடரில் இம்மாதிரி நிகழ்கிறது” என்றார் பெய்லிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x