Last Updated : 26 Aug, 2017 09:53 AM

 

Published : 26 Aug 2017 09:53 AM
Last Updated : 26 Aug 2017 09:53 AM

தரங்காவுக்கு தடை: இலங்கை கேப்டனாக கபுகேதரா நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனான உபுல் தரங்காவுக்கு 2 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின்போது இலங்கை அணி குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசாததால் அந்த அணியின் கேப்டன் உபுல் தரங்கா 2 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இதுபோன்று தடை விதிக்கப்படுவது 2-வது முறையாகும். முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது அவருக்கு இதே காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது.

தினேஷ் சந்திமால்

தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணியின் கேப்டனாக சமரா கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை அணியில் தினேஷ் சந்திமால், லஹிரு திருமன்னே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தினேஷ் சந்திமால், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x