Published : 22 Aug 2017 10:48 AM
Last Updated : 22 Aug 2017 10:48 AM
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரின் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஜூனியர் உலகக் கோப்பை ஷாட்கன் துப்பாக்கிச் சுடுதல் தொடர் இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் டிராப் பிரிவில் இந்தியாவின் மணீஷா கீர், லக்ஷயா ஷியோரன் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் செவின் எட்வர்டு லேயர், எம்மா லீ வில்லியம்ஸ் ஜோடியை தோற்கடித்தது.
முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் 16 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இந்திய ஜோடி 4-வது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
இறுதிச் சுற்றில் இத்தாலியின் இம்மானுலே புக்கோலியரி, மரியா பால்மிட்டிசா ஜோடி சகநாட்டைச் சேர்ந்த அல்பெர்ட்டோ பெலுஸ்கோ, எரிகா செஷ்சா ஜோடியை 41-37 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவில், 15 வயதான இந்திய வீரர் பரத்வாஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் 48 புள்ளிகள் சேர்த்தார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் 70 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், பின்லாந்தின் மிகி லோனென் 66 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். - ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT