Published : 08 Oct 2016 11:51 AM
Last Updated : 08 Oct 2016 11:51 AM

3-வது டெஸ்ட்: நன்றாகத் தொடங்கி ஆட்டமிழந்த கம்பீர்; இந்தியா 75/2

இந்தூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முரளி விஜய், கம்பீர் விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் தவணுக்குப் பதிலாக கம்பீர், புவனேஷ் குமாருக்கு பதிலாக மீண்டும் உமேஷ் யாதவ் வந்துள்ளனர். நியூஸிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பியுள்ளார்.

விராட் கோலி 7 ரன்களுடனும் செடேஸ்வர் புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

புதிய இந்தூர் பிட்சில் நிறைய வெடிப்புகள் உள்ளன. முதல் நாளுக்குப் பிறகு பேட்டிங் மேலும் கடினமாகி விடும், ஏன் மோசமான பிட்ச் ஆகக்கூட வாய்ப்புள்ளது என்ற நிலையில் 3-வது முறையாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

முதல் 12 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எடுக்க அடுத்த 10 ஓவர்களில் கம்பீர் விக்கெட்டுடன் 15 ரன்களையே எடுக்க முடிந்தது.

முரளி விஜய் மீண்டும் 10 ரன்களில் படேலிடம் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். லாதமிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். போல்ட்டின் ஒரே ஓவரில் ஒரு கிளாஸ் கவர் டிரைவ்கள் மூலம் 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் மீண்டும் ஏமாற்றமளித்து வெளியேறினார்.

கவுதம் கம்பீர் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹென்றியை அடுத்தடுத்து புல் ஷாட்டில் ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் லாங் லெக்கில் ஒருசிக்சரையும் விளாசினார், இதில் 2-வது சிக்ஸ் அப்பகுதியில் பீல்டர் இருந்தும் தைரியமாக விளாசப்பட்டது. 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் தன்னம்பிக்கையுடன் ஆடிய கவுதம் கம்பீர் 29 ரன்கள் எடுத்து போல்ட் வீசிய இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து கொஞ்சம் தாழ்வாக வந்தது. கோலி தனது வழக்கமான கவர் டிரைவ் பவுண்டரி அடித்தார்.

புஜாரா 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தும் கோலி 7 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இந்தியா உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x