Published : 28 Nov 2016 11:52 AM
Last Updated : 28 Nov 2016 11:52 AM

3-வது டெஸ்ட்: இந்தியா முன்னிலை; ஜடேஜா அரை சதம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று, உணவு இடைவேளையின் போது இந்தியா 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் ஸ்கோரை விட 71 ரன்கள் முன்னிலையாகும்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 271 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அஸ்வினும் - ஜடேஜாவும் இன்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 40 நிமிடங்களுக்கும் மேலாக களத்தில் நின்று ரன் சேர்த்த இந்த இணை ஆட்டத்தின் 95-வது ஓவரில் பிரிந்தது. ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அஸ்வின் 72 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை அஸ்வினும் - ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப்பில் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய ஜயந்த் யாதவ், ஜடேஜாவுடன் இணைந்து ரன் சேர்க்க ஆரம்பித்தார். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா 104 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதம் எட்டினார். மேற்கொண்டு இந்த இணையை பிரிக்க இங்கிலாந்து செய்த முயற்சிகள் வீணாகின. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 354 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடர்ந்து திறம்பட ஆடிய யாதவ் 66 பந்துகள் நிலைத்து ஆடி 26 ரன்களையும், ஜடேஜா 142 பந்துகளில் 70 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x