Published : 30 Aug 2014 03:01 PM
Last Updated : 30 Aug 2014 03:01 PM

3வது ஒருநாள் போட்டி: ராயுடு களமிறங்குகிறார்; இந்தியா முதலில் ஃபீல்டிங்

நாட்டிங்கமில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். காயமடைந்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அம்பாதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிலைமை பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால் பீல்டிங் தேர்வு செய்திருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டானுக்குப் பதிலாக (கிளென் மெக்ரா போல் வீச முயற்சி செய்யும்) ஸ்டீவ் ஃபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா இல்லாததால் ரஹானே தொடக்க வீரராகக் களமிறங்குவார். இங்கிலாந்தில் அவர் ஏற்கனவே தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x