Published : 19 Dec 2014 12:11 PM
Last Updated : 19 Dec 2014 12:11 PM
2019 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளது.
2017 மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தையும் லார்ட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1975, 1979, 1983, 1999 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டங்கள் லார்ட்ஸில் நடைபெற்றுள்ளன.
உலகக் கோப்பையின் அரை யிறுதி ஆட்டங்களை மான்செஸ்டர், பர்மிங்காம் (எட்பாஸ்டன்) ஆகிய நகரங்களிலும், தொடக்கப் போட்டியை ஓவலிலும் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
“பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடிகொண்டுள்ள இங்கிலாந்தில் அனைத்து அணிகளுக்கும் ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைக்கும்” என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கைல்ஸ் கிளார்க் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT