Published : 29 Jan 2015 04:26 PM
Last Updated : 29 Jan 2015 04:26 PM

1983 உலககோப்பை: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சக வீரர்களிடம் பேச மறுத்த ஜொயெல் கார்னர்

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது அந்த அணியின் ஜொயெல் கார்னரை மிகவும் பாதித்தது.

மே.இ,.தீவுகளின் உலகப்புகழ் பெற்ற வர்ணனையாளர் டோனி கோசியர், தனது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ பத்தியில் அந்த நாள் பற்றியும், ஜொயெல் கார்னரின் மனநிலை பற்றி எழுதியுள்ளார்.

183 ரன்களை இந்தியா எடுக்க மே.இ.தீவுகள் 140 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய திருப்பு முனை வெற்றி மற்றொரு அணிக்கு சரிவின் தொடக்கமாக அமைந்த்து.

டோனி கோசியர் அந்தப் பத்தியில் கூறும்போது ஜொயெல் கார்னர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார், அதாவது 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி வேகப்பந்து வீச்சாளர் ஜொயெல் கார்னரையே அதிகம் பாதித்தது என்கிறார்.

கார்னர் கூறியதை அவர் மேற்கோள் காட்டும்போது, “நான் நீண்ட நாட்களுக்கு, அதாவது, 2 அல்லது 3 மாதங்களுக்கு என் அணி வீரர்களிடத்தில் பேசவேயில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 1983 இறுதிப் போட்டி தோல்வி மிகப்பெரிய ஏமாற்றமளித்த ஒரு கிரிக்கெட் நிகழ்வாகும். 183 ரன்கள்தானே என்ற அலட்சியமே தோல்விக்குக் காரணம், அதீத தன்னம்பிக்கை மிகவும் மோசமானது என்பதை உணர்ந்தோம்.” என்று கார்னர் அப்போது கூறினார்.

போட்டியின் போது கார்னரும், மார்ஷலும் பேசிக்கொண்ட போது, மார்ஷலை நோக்கி கார்னர் ‘நாம் களமிறங்க வேண்டிய தேவை இருக்குமா?” என்றார் அதற்கு மால்கம் மார்ஷல், ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம், என்று பதில் அளித்தார்.

மார்ஷல் மேலும் கார்னரிடம் கூறும்போது, “சிறிய ரன் எண்ணிக்கையைத் துரத்தும் போது அனைவரும் தனக்கு அடுத்து வருபவர் வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட நிலை தோன்றினால் நமக்கு சிக்கல்தான்.” என்று மால்கம் மார்ஷல் ஒரு தீர்க்க தரிசியைப் போல் கூறியுள்ளார்.

மால்கம் மார்ஷல் கூறியது கிரிக்கெட் அரங்கில் ஒரு மனோவியல் கூறாகும். சிறிய ரன் எண்ணிக்கையைத் துரத்தும் போது நிச்சயம் நாம் அவுட் ஆனால் கூட அடுத்து வருபவர் ஆட்டத்தை வெற்றி பெறச் செய்து விடுவார் என்று நினைப்போம் என்று மால்கம் மார்ஷல் கூறியிருப்பது சிறிய ரன் இலக்கை எடுக்க முடியாது தோல்வி அடையும் பெரிய அணிகளுக்கு ஒரு சிறந்த மனோவியல் பாடமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x