Published : 15 Apr 2016 09:24 AM
Last Updated : 15 Apr 2016 09:24 AM

வெற்றிக்கணக்கை தொடங்குவது யார்?- டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதுடெல்லியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. தங்கள் முதல் போட்டியில் தோற்ற இந்த இரு அணிகளும் இன்று வெற்றிக் கணக்கை தொடங்குவதில் தீவிரமாக உள்ளன.

கடந்த ஐபிஎல் போட்டித்தொடரில் மிக மோசமாக ஆடிய டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இந்த ஆண்டாவது வெற்றிகரமாக ஐபிஎல்லை தொடங்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக டெல்லி அணி கொல்கத்தாவிடமும், பஞ்சாப் அணி குஜராத்திடமும் தோல்வி அடைந்தன. இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த அணிகள் இன்று களம் இறங்குகின்றன.

ஏமாற்றிய பிரத்வெயிட்

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் புதிய உற்சாகம் பெற்றுள்ள டெல்லி அணி, பேட்டிங்குக்கு டி காக்கையும், சஞ்சு சாம்சனையுமே பெரிதும் நம்பியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டியின் நாயகனான பிரத்வெயிட் அந்த அணியில் இருந்தாலும் கடந்த போட்டியில் அவர் பெரிதாக எதுவும் சாதிக்காமல் ஏமாற்றிவிட்டார். இந்த சூழலில் மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், நெகி போன்ற உள்ளூர் ஆட்டக்காரர்கள் கைகொடுத்தால்தான் ஏதாவது சாதிக்க முடியும் என்ற நிலையில் அந்த அணி உள்ளது.

பஞ்சாப் அணியைப் பொறுத்த வரை டேவிட் மில்லர் - மேக்ஸ்வெல் கூட்டணியையே அந்த அணி பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த போட்டியில் சொதப்பிய அவர்கள், இன்றைய போட்டில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் டெல்லி உள்ளது.

மில்லர், மேக்ஸ்வெல் ஆகியோர் கடந்த போட்டியில் சொதப்பியபோதிலும் முரளி விஜய், வோரா ஆகியோர் சிறப்பாக ஆடியது டெல்லிக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நால்வரும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் பஞ்சாப்பை எதிர்த்து நிற்பது டெல்லி அணிக்கு சற்று சிரமமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x