Published : 11 Feb 2016 10:06 AM
Last Updated : 11 Feb 2016 10:06 AM
இந்தியாவில் யாரும் அச்சத்துடன் விளையாடவேண்டிய நிலை இருக்காது. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது, மேலும் தங்கள் நாட்டு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் டி 20 உலககோப்பையில் பங்கேற்க முடியும் என பாக். கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. மேலும் பொதுவான நாடு ஒன்றில் பாக். அணி பங்கேற்கும் போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் பாக். வாரியம், ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் இதுகுறித்து கூறும்போது:
"இந்தியாவில் யாரும் அச்சத் துடன் விளையாடவேண்டிய நிலை இருக்காது. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதற்கு முன்பு பல உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தி யுள்ளது. யாரும் இங்கே அச்சம் கொள்ளவேண்டாம். இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் யாருக் காவது பிரச்சனை இருந்தால் அவர்கள்தான் அதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT