Published : 07 Mar 2016 09:59 AM
Last Updated : 07 Mar 2016 09:59 AM
உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தர்மசாலாவில் விளையாடக் கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்த முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தாகவும், அதனால் அங்கு போட்டி யை நடத்த போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் இமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே தர்மசாலாவில் நடை பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டி குறித்து இமாச்சல பிரதேச முதல்வர் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது கருத்து வெறுப்பை வளர்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ் தான் அணி தர்மசாலாவில் ஆடக் கூடாது.
இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.
அதிகாரிகள் வருகை
இந்நிலையில் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட வுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவதற்காக அந்நாட்டின் 2 அதிகாரிகள் இன்று இந்தியா வருகிறார்கள். இதற்காக அவர்க ளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT