Published : 07 Mar 2016 10:00 AM
Last Updated : 07 Mar 2016 10:00 AM
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் போன்ற எந்த விதமான முறைகேடுகளும் நடக்காது என்று நம்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஊழல் தடுப்புத்துறை தலைவர் சர் ரோனி பிளானகன் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புத்துறை தலைவர் சர் ரோனி பிளானகன், மும்பையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
58 போட்டிகள்
டி20 உலகக்கோப்பையில் ஆண்களுக்கும், பெண்களுக் குமாக சேர்த்து மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஊழல்கள் நடக்காமல் தடுக்க அனைத்து விதமான நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சூதாட்டக்காரர்களின் வலையில் சிக்காமல் இருப்பது குறித்து ஒவ்வொரு அணியின் வீரர்க ளுக்கும், அவர்களுடன் வரும் பயிற்சியாளர்களுக்கும், போட்டி நடுவர்களுக்கும் பாடம் நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஊழல் தடுப்புத்துறையின் தொலைபேசி எண்கள் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தங்களை யாராவது அணுகினால் உடனடி யாக வீரர்கள் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
450 புகார்கள்
கிரிக்கெட்டை ஊழல் இல்லாத ஒரு விளையாட்டாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். கடந்த ஆண்டு ஊழல் தடுப்புத்துறையின் தொலைபேசி எண்ணுக்கு 450 புகார்கள் வந்தன. நாங்கள் அதுகுறித்து தீவிரமாக விசாரித்து நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தத் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஊழல் முறைகேடுகள் ஏதும் இல்லாத தூய்மையான தொடராக இருக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு சர் ரோனி பிளானகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT