Published : 20 Apr 2017 06:42 PM
Last Updated : 20 Apr 2017 06:42 PM

சாம்பியன்ஸ் டிராபி: மொர்டசா தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா, ஷாகிப் உல் ஹசன், மோர்டசா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் மெஹதி ஹசன் மிர்சா போன்ற இளம் வீரர்களும் கலந்த மொர்டசா தலைமை வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வங்கதேசம் வீழ்த்தியது நினைவிருக்கலாம்.

வங்கதேச அணி வருமாறு:

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயேஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் உல் ஹசன், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஸ், சுன்சாமுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசைன், ஷபியுல் இஸ்லாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x