Published : 19 Nov 2014 10:45 AM
Last Updated : 19 Nov 2014 10:45 AM
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் இடையே இப்போட்டி நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் சூச்சி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நேற்று 8-வது சுற்று நடைபெற்றது. இதில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடனும், கார்ல்சன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர். இதில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்று ஆட்டம் சமனில் முடிந்தது.
நேற்றைய ஆட்டம் 124 நகர்த்தல்கள் வரை சென்றது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டயில் இதுவே அதிகபட்ச நகர்த்தல்களை கொண்ட போட்டியாக அமைந்தது. இதற்கு முன்பு நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டி 122 நகர்த்தல்கள் வரை சென்று டிராவில் முடிந்தது.
மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இது வரை நடைபெற்றுள்ள 8 சுற்றுகளில் இரண்டில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். ஆனந்த ஒரு ஆட்டத்தில் வென்றார். மற்ற 5 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இப்போதைய நிலையில் கார்ல்சன் (4.5 புள்ளிகள்) ஆனந்தை (3.5 புள்ளிகள்) விட ஒரு புள்ளி கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
இன்னும் 4 சுற்றுகள் நடை பெறவுள்ள நிலையில் அவை அனைத்தையும் டிரா செய்தால் கூட கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். சாம்பியன் பட்டத்தை மீண்டும் வெல்ல ஆனந்துக்கு வெற்றிகள் தேவைப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT