Last Updated : 19 Jun, 2015 09:41 AM

 

Published : 19 Jun 2015 09:41 AM
Last Updated : 19 Jun 2015 09:41 AM

உலகக் கோப்பை: 4 அணிகள் முன்னேற்றம்

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா, தென் கொரியா ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கொலம்பியா மட்டும் 3-வது இடத்தைப் பிடித்த சிறந்த அணிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஒட்டாவாவில் நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் எப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த பிரான்ஸ் அடுத்த சுற்றை உறுதி செய்தது.

மான்ட்ரியாலில் நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி 6 புள்ளிகளைப் பெற்றது. கோல் வித்தியாச அடிப்படையில் 2-வது இடத்தைப் பிடித்த அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

இ பிரிவு லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்த தென் கொரிய அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியிருக்கும் தென் கொரியா, அதில் பிரான்ஸை சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x