Published : 22 Nov 2016 08:33 PM
Last Updated : 22 Nov 2016 08:33 PM
இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாகவே இது அறிவுறுத்துகிறது.
கொல்கத்தாவில் நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் முதுகு காயம் காரணமாக 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தன் உடல் தகுதியை நிரூபிக்க மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆடி 36 ஓவர்களை வீசினார்.
இதனையடுத்து அவர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஹர்திக் பாண்டியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT