Published : 09 Mar 2016 09:36 AM
Last Updated : 09 Mar 2016 09:36 AM
கங்குலி:
இறுதிப்போட்டிக்கு இன்னும் அதிக தொலைவு உள்ளது. ஆசிய கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களில் விளையாடியது போன்று இந்தியா விளையாடும் பட்சத்தில் நிச்சயம் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. இந்திய அணி நல்ல பார்முடன் இந்த தொடரில் நுழைகிறது.
வாசிம் அக்ரம்:
இந்தியா, கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் அணியை வழக்கம் போல் கணிக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை இது புதிய தொடர், புதிய ஆட்டம். ஆசிய கோப்பையில் நடந்தவற்றை மறந்துவிட்டு, உலக கோப்பை தொடரை அனுபவித்து ஆடவேண்டும். தர்மசாலாவில் இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கபில்தேவ்:
இந்திய அணி சம பலத்துடன் உள்ளது. இது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். பொதுவாக நான், எந்த அணி கோப்பையை வெல்லும் என கருத்து கூறுவது கிடையாது. ஆனால் இந்த முறை இந்திய அணியை கூறுவேன். அவர்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தற்போதைய சூழ்நிலையில் தோனிக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை.
இன்சமாம்:
கோப்பையை வெல்லும் அணிகளில் இந்தியா முதன்மையாக உள்ளது. பாகிஸ்தான் அணி போதுமான வகையில் ஊக்கப்படுத்தப்படவில்லை. இந்திய அணி சிறந்த கேப்டனை கொண்டுள்ளது. ஆஸி. அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில் அதன் பிறகு இந்திய அணி மறுபிரவேசம் செய்து வெற்றிகளை பெற்றது. பல்வேறு அணிகள் இதுபோன்று செயல்பட்டது கிடையாது. இந்தியாவை தவிர தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது.
அசாருதீன்:
இந்திய அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம், மற்றும் நெருக்கடியும் இருக்காது. சுழல் ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும். மேலும் உச்ச கட்ட பார்மில் உள்ளனர். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT