Published : 12 Jan 2017 10:25 AM
Last Updated : 12 Jan 2017 10:25 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 12: சிவனும் விஷ்னுவும் நடத்தும் லீலை

இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டும் கருவிலேயே திரு என்ற நிலையில் பிறந்தவன் பிரஹலாதன். அன்னையின் அன்பிலும் செல்வத்தின் செழிப்பிலும் வாழ்க்கை ஆரம்பமாகியது. அப்பாவும் நல்லவர்தான். நானே கடவுள் என்ற நினைப்பில் மிதப்போடு திரிபவர் அவர். பிரஹலாதன், ஹரி நினைப்போடு இருப்பதால், ஒரு இடைவெளி இருவருக்குள்ளும் விழுந்தது.

மகனைச் சட்டைபண்ணாத ஹிரண்யன், தன்னை ஈரேழு லோகமும் வணங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தான்; தூரதேசங்களில் உள்ளவர்கள் எப்படியோ..! அவன் அருகில் வசிப்பவர்களெல்லாம் அவனைக் கடவுளாகப் போற்றினார்கள். தினமும் ஆராதனை பண்ணினார்கள். கைதேர்ந்த ஓவியர்களை வைத்து சிறியதும் பெரியதுமாய் அவனது உருவத்தை வரைந்து வைத்து வழிபட்டார்கள். நிவேதனம் பண்ணிப் பின்னரே உண்டார்கள். அவனை வணங்கியே அன்றைய நாளைத் தொடங்கினார்கள்.

பெருமகிழ்வோடு இருந்தான் ஹிரண்யன். ஆனாலும் மகனை நினைத்துச் சின்ன நெருடல் அவனுக்குள் இருக்கவே செய்தது. இதுதான் கடவுளுக்கும் கடவுளாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வித்தியாசம். சின்ன நெருடலையே இவனால் போக்கிக்கொள்ள முடியவில்லை.

தம்பியை இழந்த அண்ணன்

ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்‌ஷனும் அண்ணன் தம்பி. அசுரகுலம் இவர்களிடம் பயத்தோடு பணியும். இதுவே அவர்களை ஆரம்பத்திலிருந்து சிறு அகம்பாவத்தோடு உலவ வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அட்டகாசம் பண்ணி, அசுர பலத்தோடு நடைபோட்டார்கள். தினவு கொண்ட காளைகளைப்போல் காணப்பட்டார்கள். இதில் ஹிரண்யாக்‌ஷன், மஹாவிஷ்ணுவின் கோபத்திற்கு ஆளாகி மாண்டான்.

இது பெரிய வெற்றிடத்தை ஹிரண்யகசிபுவிற்கு ஏற்படுத்தியது. சகோதரனை இழந்தபின் அவனுக்கு கோபம் பொங்கியது, வாழ்க்கை வெறுப்பாகிப் போனது. உணவு இறங்கவில்லை. இப்படியாக சில காலம் கழிந்தது. மலைபோன்ற உணவுப் பொருட்கள் செலவாகாமல் கிடந்தன. ஏராளமான கால்நடைகள் நிம்மதியாக இருந்தன.

திடீரென ஒருநாள்… “விடமாட்டேன் ஹரியை! அவன் யார் என் சகோதரனைக் கொல்வதற்கு! பழிக்குப்பழி!” என்று கிளம்பியவன், இதுவரை யாரும் இப்படி ஒரு தவம் பண்ணியதில்லை என்பது போல் ஒரு கடும் தவம் புரிந்தான். அதன் வீரியம் பத்மத்தை அசைக்க, பிரம்மா எழுந்தோடிவந்தார். கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுத்தார். எங்கே தன் மீது கை வைத்து விடுவானோ எனப் பயந்து சட்டென ஓடி மறைந்தார். சகல லோகங்களும் அதிரும்படி சிரித்தான் ஹிரண்யன். அந்தச் சிரிப்பிலேயே பல சிற்றுயிர்கள் சுருண்டு விழுந்து செத்தன. பூனையின் ‘மியாவ்’ என்ற சத்தத்தைக் கேட்டே சின்னக் கிளிகள் இறந்து போகுமாம்.

அது போன்ற நிலையில் அடுக்கடுக்காய் அழிவுகள். மூவுலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்போது வைகுண்டம் நோக்கிப் போனான். சல்லடை போட்டுத் தேடினான். அப்போது மஹா விஷ்ணு இவனுக்குள் நுழைந்து கொண்டாராம். பையனின் பாடப் புத்தகத்திற்குள் பணத்தை வைக்கும் தகப்பனைப் போல, தனக்குள் தேடமாட்டான், இவன் என்று உள்ளே நுழைந்தவரின் கணக்குச் சரியாகவே இருந்தது. தான் வருவது தெரிந்ததும் பயத்திலேயே மாண்டுவிட்டான் இந்த ஹரி என்ற முடிவுக்கு வந்தவன் வெற்றிக் களிப்போடு நெஞ்சை நிமிர்த்தியபடி நேரே அரண்மனை வந்தான். உள்ளே நுழைந்த ஹரி வெளியே வந்து வைகுண்டம் போய் பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் வாயில் சிறு முறுவல் தெரிந்தது.

சிம்மம், கருடன், மனிதன் என்ற மூன்றின் அம்சத்தோடு வந்தார் பரமசிவன். மஹாவிஷ்ணுவின் கோபத்தை அடக்கினார். ஒரு பெரிய தபஸ்விக்கு கோபம் வந்தால் அவரைச் சமாதானப் பண்ண இன்னுமொரு தபஸ்விதான் வரவேண்டும்.

திடீரென ஒருநாள்… “விடமாட்டேன் ஹரியை! அவன் யார் என் சகோதரனைக் கொல்வதற்கு! பழிக்குப்பழி!” என்று கிளம்பியவன், இதுவரை யாரும் இப்படி ஒரு தவம் பண்ணியதில்லை என்பது போல் ஒரு கடும் தவம் புரிந்தான். அதன் வீரியம் பத்மத்தை அசைக்க, பிரம்மா எழுந்தோடிவந்தார். கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுத்தார். எங்கே தன் மீது கை வைத்து விடுவானோ எனப் பயந்து சட்டென ஓடி மறைந்தார். சகல லோகங்களும் அதிரும்படி சிரித்தான் ஹிரண்யன். அந்தச் சிரிப்பிலேயே பல சிற்றுயிர்கள் சுருண்டு விழுந்து செத்தன. பூனையின் ‘மியாவ்’ என்ற சத்தத்தைக் கேட்டே சின்னக் கிளிகள் இறந்து போகுமாம்.

அது போன்ற நிலையில் அடுக்கடுக்காய் அழிவுகள். மூவுலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்போது வைகுண்டம் நோக்கிப் போனான். சல்லடை போட்டுத் தேடினான். அப்போது மஹா விஷ்ணு இவனுக்குள் நுழைந்து கொண்டாராம். பையனின் பாடப் புத்தகத்திற்குள் பணத்தை வைக்கும் தகப்பனைப் போல, தனக்குள் தேடமாட்டான், இவன் என்று உள்ளே நுழைந்தவரின் கணக்குச் சரியாகவே இருந்தது.

தான் வருவது தெரிந்ததும் பயத்திலேயே மாண்டுவிட்டான் இந்த ஹரி என்ற முடிவுக்கு வந்தவன் வெற்றிக் களிப்போடு நெஞ்சை நிமிர்த்தியபடி நேரே அரண்மனை வந்தான். உள்ளே நுழைந்த ஹரி வெளியே வந்து வைகுண்டம் போய் பாம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டார். அவர் வாயில் சிறு முறுவல் தெரிந்தது.

ஹிரண்ய கசிபு -தவம் செய்யப் போயிருந்தபோது தேவர்கள் அசுரர்களை அழித்தார்கள். ஹிரண்ய கசிபுவின் மனைவி காயாதுவைப் பிடித்துச் சென்றான் இந்திரன். அப்போது அவள் கர்ப்பமாக இருந்தாள். இந்திரன் குழந்தையைக் கருவிலேயே அழிக்க முடிவு செய்தபோது நாரதர் குறுக்கிட்டார். “இந்திரா குழந்தையை அழிக்காதே; அதுவே, அவன் தந்தையை அழிக்கும்.

அவன் முடிவுக்கு இவன்தான் மூலமாய் இருப்பான் விட்டுவிடு!” என்று கூறி காயாதுவை அழைத்துப் புறப்பட்டார். ஆசிரமத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டார். அவள் வேண்டிய பணிவிடைகளைச் செய்ய, இவர் சகலத்தையும் உபதேசம் பண்ணினார். அவையெல்லாம் வயிற்றுக்குள் இருந்து பிரஹலாதனின் வசம் சென்று தங்கிக் கொண்டன.

ஹிரண்யகசிபு அரண்மனை திரும்பிய விஷயம் அறிந்து எதுவும் நடக்காதது போல் காயாது, அரண்மனை வந்தாள். ப்ரஹலாதன் பிறந்தான்.

ஹரிநாமம் சொல்லிய ப்ரஹலாதன்

இப்போது அவன் தன்னைப் பணியாது, ஹரி நாமம் சொல்வது வேதனையையும், கோபத்தையும் கொடுக்க பிள்ளையென்றும் பாராமல் கொடுமைகள் பல செய்து பரவசப்பட்டான். ப்ரஹலாதனோ அசுர குலத்தில் பிறந்து, அசுர குணம் எதுவுமில்லாமல் இருந்தான். மற்றவர்களுக்கு இது விநோதமாக இருந்தது. ஹிரண்யனை இந்த விஷயம் நோகச் செய்தது.

இப்போது அவன் தன்னைப் பணியாது, ஹரி நாமம் சொல்வது வேதனையையும், கோபத்தையும் கொடுக்க பிள்ளையென்றும் பாராமல் கொடுமைகள் பல செய்து பரவசப்பட்டான். ப்ரஹலாதனோ அசுர குலத்தில் பிறந்து, அசுர குணம் எதுவுமில்லாமல் இருந்தான். மற்றவர்களுக்கு இது விநோதமாக இருந்தது. ஹிரண்யனை இந்த விஷயம் நோகச் செய்தது.

கடைசியில் கடவுளைக் காட்டு என்றான். வந்தார் ஹரி நரசிம்மமாக. அழிந்தான் ஹிரண்யன். அவனோடு அவன் ஆணவம் அகம்பாவம் அறியாமை எல்லாம் அழிந்தன. ஆனால் இவருக்கு மட்டும் கோபம் தணியவில்லை; ப்ரஹலாதன் வணங்கிப் பார்த்தான். அம்பாள் ப்ருத்தியங்கிரா என்ற ஒரு ரூபம் எடுத்துப் பார்த்தாளாம். இவரது கோபம் அடங்கியதாய் இல்லை. நரமும், சிம்மமுமாய் இருந்த ஹரியின் கோபத்தை அடக்க...( கவனிக்கவும் அவரை அடக்க அல்ல ) சிம்மம் கருடன் மனிதன் என்ற மூன்றின் அம்சத்தோடு வந்தார் பரமசிவன். மஹாவிஷ்ணுவின் கோபத்தை அடக்கினார்.

ஒரு பெரிய தபஸ்விக்கு கோபம் வந்தால் அவரைச் சமாதானப் பண்ண இன்னுமொரு தபஸ்விதான் வரவேண்டும். இந்த தபஸ்விக்கு அவர் நடிக்கிறார் என்பதும் தெரியும். தான் நடிப்பது அவருக்குத் தெரியும் என்பதும் இவருக்குத் தெரியும். ஆனால் உலகத்திற்கு அதன் மூலம் ஒரு பெரிய பாடமும் நன்மையும் உண்டாக வேண்டும் என்ற காரணமாக இவை எல்லாம் நடத்தப்படுகின்றன. இதுதான் நரசிம்மரும் சரபேஸ்வரரும் நமக்குத் தரும் போதனை-அறிவுரை-அறவுரை எல்லாம்!

நம்மை மீறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன அன்பர்களே! அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரியாத நாம் வீணான சர்ச்சைகளில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம். அவர்களது திருவிளையாடல்களை ரசித்துப் பாருங்கள், மனம் ரசிக்கும்போது அவன் அருள் தானாய் நமக்குள் வந்து விடுமில்லையா? அதுதானே சத்தியம்.

இரண்டு சிற்பங்கள்

இருக்கட்டும். இங்கே காட்டப்பட்டுள்ள சிறிய படம் திருவிடைமருதூர் அருகில் உள்ள திருபுவனம் என்ற திருக்கோயிலில் உள்ள சரபேஸ்வரர். இங்கு சரபேஸ்வரமூர்த்தி மிகப்பிரபலம். எதிரிகள் பயமின்றி இருக்க இங்கு தினமும் சரபேஸ்வரரை நோக்கி ஹோமம் நடந்த வண்ணமே இருக்கிறது. இதில் சிவ அம்சங்களுடன் கைகள் காட்டப்பட்டு மான், மழு, பாம்பு, நெருப்பு, ஜடாமுடி ஆகியவை காட்டப்பட்டுள்ளன. நான்கு கரங்கள், எட்டு கால்கள் என்ற வகையில் சிவ உருவை தெளிவாகக் காட்டியிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கிறது. இங்குள்ள ஐம்பொன் திருமேனி மிக எழிலும், அழகும் பொலிவுடன் அற்புதமான விக்கிரகமாகும்.

அடுத்துக் காட்டப்பட்டுள்ள சரபேஸ்வர மூர்த்தி தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பிரகாரத்தின் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது. சிம்ம முகமும் மேலே பரமசிவனுக்கே உரிய ஜடாமுடி - அதில் பிறை, பாம்பு என்றபடி அப்படியே இருக்க மூன்று கண்களும், எட்டு கால்களும், சிம்மத்திற்கே உரிய வாலும் இரண்டு இறக்கைகளுமாக (இவை அம்பாளின் அம்சமாகக் கூறப்படுகிறது) மிக அழகிய திருக்கோலம். இங்கு சிவ அம்சமாக ஜடாமுடி மட்டும் காட்டப்பட்டு, எட்டும் சிம்மக் கால்களாகவே காட்டப்பட்டுள்ளது.

இது நேரடியான அவதாரக் கோலம். மஹாவிஷ்ணுவிடமிருந்து, ஆக்ரோஷ சக்தி எடுக்கப்பட்டதும், அவரது எட்டுக் கரங்களும், அயர்வில் துவண்டு விட, சங்கு சக்கரம் நழுவி விழுந்து கிடக்கிறது. பிரஹலாதன், இருவரையும் ஒருசேர வணங்குகிறான். மேலே தேவர்களும், முனிவர்களும் வணங்கி மகிழ ஆனந்தமும், அருளும் பொங்கிப் பாய்கிறது. அந்த வெள்ளத்தில் சிறிது முங்கி எழுந்துதான் வருவோமே!

மீண்டும் அடுத்தவாரம்...


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x