Published : 26 Jul 2014 01:48 PM
Last Updated : 26 Jul 2014 01:48 PM

நிழல் தரும் ‘பகல் வீடு’: மூத்த குடிமக்களுக்கு மதுரையில் ஒரு வசந்த வாசல்

என்னதான் லட்ச லட்சமாய் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும் வயதான காலத்தில் பெற்றோரை வீட்டைக் காக்கும் வாட்ச்மேனாக வும், தங்களது பிள்ளைகளை பராமரிக்கும் ஆயாக்களாகவும்தான் பெரும்பாலான பிள்ளைகள் பாவிக்கிறார்கள். ஆடி ஓய்ந்த வயதில் அவர்களின் தேவை என்ன.. அவர்களின் உணர்வுகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன என்பது குறித்து எவரும் கவலைப் படுவதில்லை. ஆனால், மதுரையி லுள்ள ‘பகல் வீடு’ இதுமாதிரியான மூத்த குடிமக்களுக்காகவே தனது வசந்த வாசலை திறந்து வைத்திருக் கிறது.

மதுரை பாத்திமா கல்லூரி அருகே இருக்கிறது ‘பகல் வீடு’. ஜெபசுரேஷ் என்பவர் 2009-ல் இதை உருவாக்கினார். பணி செய்யும் காலத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஓய்வுக்குப் பிறகு வீட்டுக்குள் முடங்கிப் போகும்போது தனிமை அவர்களை வாட்டும். இதனால் அநேகம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அந்த வாட்டத்தைப் போக்க வேண்டும் என்பதுதான் ‘பகல் வீட்டின்’ நோக்கம் என்கிறார் அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா.

மூத்த குடிமக்களுக்காக ‘பகல் வீடு’என்ன செய்கிறது? தொடர்ந்து பேசினார் ஜெபி விக்டோரியா. ‘‘ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தனிமையில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு பொழுது போக்குக்கும் வாய்ப்பிருப் பதில்லை. எங்களது ‘பகல் வீடு’ காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை திறந்திருக்கும். அந்த நேரத்தில், தனிமையை தொலைத்து மனதை லேசாக்கி கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இங்கு வருகிறார்கள். தாங்களாக வரமுடியாதவர்களை நாங்களே வாகனம் வைத்து அழைத்து வருகிறோம்.

இங்கே ஒரு செவிலியர், சமூக சேவகர், உதவியாளர் இருக்கிறார் கள். காலை பத்து மணியிலிருந்து அரை மணி நேரம் பிரேயர் நடக்கும். வயதானவர்களுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டு உடம்பு இறுகிக் கிடக்கும். அந்த நிலையை போக்கி ரிலாக்ஸ் ஏற்படுத்துவதற்காக அவர்களுக்குச் சின்னச் சின்ன உடற் பயிற்சிகளை கொடுப்போம். காலை பதினோரு மணிக்கு தேநீர் வேளை. அதன் பிறகு மூளைக்குப் பயிற்சி. வயதான வர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கும். அதை போக்குவதற்காக அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டிகள் உள்ளிட்ட சின்னச் சின்னப் பயிற்சிகளைக் கொடுப் போம்.

மதியம் நாங்களே மதிய உணவு கொடுப்போம். இங்கு நூலகம் ஒன்றும் இருக்கிறது. விருப்பமானவர்கள் புத்தகங்கள் படிக்கலாம். வயதானவர்கள் விளையாட வசதியாக இண்டோர் கேம்ஸ்களையும் வைத்திருக்கி றோம். மதியத்தில் ஓய்வெடுக்க படுக்கை வசதியும் உண்டு. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து இவர்கள் மத்தியில் பேச வைப்போம். அப்போது தங்களின் உடல்நிலை தொடர்பான சந்தேகங்களை இவர்களே நேரடி யாக மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுகிறார்கள்.

இங்குள்ளவர்களை மாதம் ஒருமுறை ஷாப்பிங்கும் அழைத்துச் செல்வோம். நல்ல சினிமா ஏதாவது வந்தால் சினிமா தியேட்டருக்கும் இவர்களை மொத்தமாக அழைத்துச் செல்வோம். இதில்லாமல் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இவர்களை, மதுரைக்கு அருகிலேயே எங்கா வது ஒரு இடத்துக்கு பிக்னிக் அழைத்துச் செல்வோம். ‘பகல் வீட்டில்’ இருக்கும் முதியவர்களிடம் நாங்கள் எதற்காகவும் பணம் வாங்குவதில்லை. அத்தனையை யும் இலவசமாகவே செய்து தருகிறோம்.

அதேசமயம் மது, சிகரெட், பாக்கு பழக்கம் உள்ளவர்களை நாங்கள் இங்கே அனுமதிப்ப தில்லை. இப்போது ‘பகல் வீட்டில்’ ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 54 பேர் இருக்கிறார்கள். இவர்களில் டாக்டர், தாசில்தார், தலைமையாசிரியர் என பலதரப் பட்டவர்களும் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர்களால் பெற்றோரை சந்தோஷ மாக வைத்துக்கொள்ள முடிய வில்லை. ஆனால், இங்கே அவர் கள் தங்களது பகல் பொழுதை மன அழுத்தம் இல்லாமல் சக தோழர் களுடன் மகிழ்ச்சியாய் கழித்து விட்டுப் போகிறார்கள். பள்ளிக்கூடத் துக்கு வந்து போகும் குழந்தை களைப்போல இவர்கள் இங்கு வந்து போகிறார்கள். வயதானவர்களும் குழந்தைகள் தானே’’ புன்முறுவ லுடன் முடித்தார் விக்டோரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x