Published : 09 Feb 2016 11:01 AM
Last Updated : 09 Feb 2016 11:01 AM

லட்சம் மக்களின் வாழ்த்து

ஒரு ஊடகம் தான் வாழும் சமூகத்தில் நிலவும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், ஒடுக்கப்படுகிற மக்களின் குரலாக ஒலிக்கவும் கடமைப்பட்டது. வஹாபியிஸம் பற்றிய கட்டுரை இந்த இரண்டு கடமைகளையும் ஒரு சேர நிறைவேற்றியுள்ளது.

கோஷம் போடத் திரளும் கூட்டமும், விளம்பர வெளிச்சமும் கிடைத்தால் மட்டுமே இன்றைய ஊடக உலகில் எந்தச் செய்தியும் வெளிப்படும் என்ற நிலையில், இந்த ஒரு கட்டுரை தமிழகம் முழுவதிலுமுள்ள பல லட்சக்கணக்கான பெரும்பான்மையான முஸ்லிம்களின் இதயக் குரலை அப்படியே பிரதிபலித்தது. இன்றைய ஊடக நியதிகளைத் கடந்து வெளிப்படத் தெரியாமல் விக்கித்து நின்ற ஒரு தலைமுறைக்கு நீங்கள் செய்த உதவி இது. மிக்க நன்றி. இது என் நன்றி மட்டுமல்ல, மவுனமாக நிம்மதிப் பெருமூச்சுவிடும் பல லட்சம் மக்களின் வாழ்த்து இது!

- அப்துல் அஜீஸ் பாகவி, கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x