Published : 22 May 2015 10:37 AM
Last Updated : 22 May 2015 10:37 AM

ராகுலுக்குப் பதவி?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் விரைவில் கட்சித் தலைவராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

நீண்ட நாள் விடுப்புக்குப் பின் நாடு திரும்பிய ராகுலின் நடவடிக்கையில் முன்பை விட வேகமும் முதிர்ச்சியும் தெரிவது உண்மைதான். எனினும் எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் விரிவாக விவாதம் செய்ய முன்வராமல் வெறுமனே மத்திய அரசைக் குறைசொல்வதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார் ராகுல்.

அதேசமயம், எதிர்க்கட்சிகளின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்திருப்பதையும் மறுக்க முடியாது. இந்நிலையில் அவர் முழுமையான, தவிர்க்க முடியாத தலைவராக உருவாகும்வரை அவருக்குத் தலைமை பொறுப்பு கொடுப்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.

கட்சிக்குள் இருக்கும் நிலவரத்தை மட்டும் பார்க்காமல் கட்சியைப் பற்றி மக்களிடம் நிலவும் கருத்தைக் கவனத்தில் கொள்வதுதான் காங்கிரஸ் தலைவர்களுக்கு நல்லது.

- ஆர். நீலகண்டன்,மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x