Published : 04 Mar 2015 10:21 AM
Last Updated : 04 Mar 2015 10:21 AM

புகையும் பகை

‘பெண் இன்று’ இணைப்பில் முகங்கள் பகுதியில் டாக்டர் கீதா கணேஷின், புகையிலைக்கு எதிரான பயணம்பற்றி அறிந்து நெகிழ்ந்தேன்.

மது, குடிப்பவரை மட்டுமே பாதிக்கும். ஆனால், புகைப்பவர் வெளியிடும் புகை, அருகில் இருப்பவரையும் பாதிக்கிறது. குடியைத் தீவிரமாய் எதிர்க்கும் அளவுக்கு நாம் புகைப் பழக்கத்தையோ, புகையிலைப் பழக்கத்தையோ எதிர்ப்பதில்லை.

மாணவர்கள் தொடங்கி இளைய சமுதாயம் வரை எளிதில் அடிமையாகும் பழக்கம் புகையிலை மற்றும் புகைப்பழக்கம்தான். சிகரெட் பெட்டியின் அட்டையில் உள்ள எச்சரிக்கை வாசகங்கள் புகைப்பவரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.

புற்று நோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுவோரைப் பற்றிக் கூறும்போது புகையிலையின் பாதிப்பு நிச்சயம் அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x