Published : 27 May 2016 11:35 AM
Last Updated : 27 May 2016 11:35 AM

தாய்மொழிக் கல்வி

எழுத்தாளர் சாரு நிவேதிதா, ‘சென்ற நூற்றாண்டின் இலக்கியம்’ கட்டுரையில் தாய்மொழியின் தேவையையும், பிற மொழிகளின் அவசியத்தையும் அருமையாகப் பதிவுசெய்திருந்தார். பிற நாடுகளில் உயர் கல்வியில் மொழிப் பாடங்கள் படிப்போர், பிறமொழி ஒன்றையும் கண்டிப்பாக உடன் பயில வேண்டும் என்ற வரைமுறைகள் உண்டு. அதனால், மொழிப் பட்டதாரி குறைந்தது இரு மொழிகளில் புலமை பெற்றவராக இருக்கிறார். அப்படி ஒரு கல்வியமைப்பு தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்மொழிப் பட்டதாரிகளே தமிழில் எழுதத் திணறும் கல்விமுறையை மாற்றி, உலக நடப்புக்கேற்ற புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிப் பயிற்றுவித்தால் பிற மொழி இலக்கியங்கள் இங்கு வரும்; நம் இலக்கியங்கள் அங்கு செல்லும். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பல எழுத்தாளர்கள் பிறிதொரு மொழிப் பட்டதாரியாகவோ அல்லது பிற கலை அல்லது அறிவியல் பட்டதாரியாகவோ இருப்பது மேலும் ஒரு விநோதம்.

- விளதை சிவா, சென்னை.



ஒளியை நோக்கி..

வாசகருக்கான ‘புத்தாயிரத்தின் படைப்பாளிகள்’ பகுதியில் ஜெயமோகனின் பதிவு அருமை. நல்ல புத்தகங்களைப் பரிந்துரைப்பது நல்ல நண்பனை அடையாளம் காட்டுவதுபோல இனிமையானது. பிரபலங்களே பரிந்துரைப்பதால் வாசிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தும். வாசகன் தீவிர தேடுதல் கொண்டவன். அந்தப் புத்தகத் தேடுதலின் ஒளியை நோக்கி நடந்தால், ஞானம் என்னும் நிழல் நம் பின்னால் வரும்.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x