Published : 30 Mar 2015 10:55 AM
Last Updated : 30 Mar 2015 10:55 AM

ஓர் அணியான கட்சிகள்: ஆரோக்கியமான தொடக்கம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகள் கட்டுவதை எதிர்த்துப் பிரதமரிடம் தமிழக எம்பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனு அளித்துள்ளது ஒரு ஆரோக்கியமான புதிய தொடக்கம்.

இந்த விஷயத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சித் தலைமைகளுக்கு நமது பாராட்டைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

நமது மாநிலத்தைப் பெரிதும் பாதிக்கும் இந்த விவகாரத்தில் கட்சிப் பாகுபாடுகள் கருதாது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

காவிரி குறித்துப் பிரச்சினை வரும்போதெல்லாம் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தி, அங்கு கட்சிகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையை நிரூபிக்கும். அதுபோல ஒரு நிலை தமிழகத்தில் எப்போது வரும் என்று நமக்கெல்லாம் ஒரு பெரும் ஏக்கமாகவே இருந்தது.

அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள பெரும் மற்றும் சிறு கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டுள்ளது நமது மாநிலத்துக்கு நிச்சயம் நன்மை பயக்கும். இதே போல நமது மாநிலத்தைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த குரல் கொடுக்க வேண்டும்.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x