Published : 27 May 2016 11:33 AM
Last Updated : 27 May 2016 11:33 AM

ஊடகப் பிழை

தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் மொத்தம் நான்குதான். அதிமுக கூட்டணியில் மூன்று கட்சிகளுடைய உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்கள் அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்றதால் அக்கட்சியின் உறுப்பினர்களாகவே நடத்தப்படுவர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் அந்தந்தக் கட்சிகளின் சொந்த சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும், அவரும் ஒரு கட்சியின் உறுப்பினராகத்தான் கணக்கில் கொள்ளப்படுவாரே தவிர, கூட்டணிக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பேற்ற கட்சியின் உறுப்பினராகக் கருதப்பட மாட்டார். இந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுகவின் தலைமையில் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு உறுப்பினரைப் பெற்றுள்ளது.

இதைத் தமிழக ஊடகங்கள், சட்டப்பேரவையில் மூன்று கட்சிகள்தான் உள்ளன என்ற பிரச்சாரத்தின் மூலம், சிறுபான்மைச் சமுதாயத்தின் குரல் சட்டசபையில் இல்லை என்ற மாயத் தோற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ளன.

- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, குவைத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x