Published : 26 May 2016 11:24 AM
Last Updated : 26 May 2016 11:24 AM

மலர்ந்தது தாமரை

மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம் மக்கள் வாழும் மாநிலமான அசாமில், பாஜக எப்படி மாற்று அரசியல் சக்தியாக உருப்பெற்றது என்பதையும் காங்கிரஸின் முன்னாள் வெற்றிக்குப் பாடுபட்டவர்களைத் தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வியூகத்தையும் தெளிவாக விளக்கியது கட்டுரை. மதவாதக் கட்சியென்ற முத்திரை, பாஜக அரசு மீது இருந்தும், தற்போதைய பிரச்சினைகளான பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகிய இரண்டு அம்சங்களுக்கான ஆக்கப்பூர்வமான தீர்வினை பாஜக அரசு நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு அசாம் மக்கள் வாக்களித்துள்ளதால், பல ஆண்டுகளாக மலராமல் இருந்த தாமரை அசாமில் மலர்ந்துள்ளது. அதனைச் சூடிய அசாம் மக்களின் கனவுகளை, புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக ஆட்சி நனவாக்குமென நம்பி வாழ்த்துவோம்.

கு.மா.பா.கபிலன், மயிலாப்பூர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x