Published : 24 Jun 2018 10:52 AM
Last Updated : 24 Jun 2018 10:52 AM
த
னியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க அலைமோதும் இந்தக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வலியுறுத்தி தனியாளாகப் பிரச்சாரம்செய்கிறார் புதுகை செல்வா. இவர் ஒரு தன்னார்வலர் மட்டுமே. தனது பிரச்சாரத்தால் இந்தக் கல்வியாண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் இவர் சேர்த்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டுகிறது!
கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க உந்திவரும் இவர், ‘அரசுப் பள்ளிகளில் இணைகின்ற பெற்றோர்கள் இயக்கம்’ என்கிற அமைப்பையும் நடத்திவருகிறார். “அரசுப் பள்ளிகளில்தான் மாணவனின் மன உணர்வுகளுக்கு மதிப்பு கிடைக்கிறது. காசு செலவில்லை. அதனால், குடும்பத்தினருக்குப் பொருளாதார அழுத்தங்கள் கிடையாது. இருப்பவர், இல்லாதோர் அனைவருக்கும் ஒரே கல்வி கிடைக்கிறது. அவனவன் அறிவுக்கு ஏற்ப கற்றல் நடக்கிறது. ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஒழுக்கமும் பொறுப்பும் குலைந்துபோயுள்ள இன்றைய சூழலில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவரால்தான், அடித்தட்டு மக்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முடியும். இதில் படிக்கும் ஒருவர் அதிகாரியானால், மக்கள் பிரதிநிதியானால் ஆரோக்கியமான சமூக மாற்றம் தானாக நடக்கும். அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன், அனைவரும் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புங்கள்” என்கிறார் புதுகை செல்வா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT