Published : 21 Jun 2018 10:33 AM
Last Updated : 21 Jun 2018 10:33 AM
கோரிக்கை நடைப்பயணம்!
ஒடிஷா இளைஞர் முக்திகாந்தா பிஸ்வால், தனது கிராமத்தின் மருத்துவ, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக 2015-ல் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று கோரி 1,500 கி. மீ. நடைப்பயணம் மேற்கொண்டுவரு கிறார். தனது கோரிக்கையைப் பிரதமர் நிறைவேற்றுவார் என்கிறார்!
மின்சாரம் - மாசு!
2,100 மெகாவாட் மின் தேவை கொண்ட ஹரியாணாவின் குருகிராமில் வெறும் 1,700 மெகவாட் மின்சாரத்தைத்தான் அரசு வழங்குகிறது. மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஜெனரேட்டரைப் பயன்படுத்தும் மக்கள், அதற்காக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 50,000 லிட்டர் டீசலைச் செலவழிக்கிறார்கள். இதனால், காற்று மாசு கடுமையாக அதிகரித்திருக்கிறது.
திறமைக்குப் பஞ்சம்?
“இந்தியாவில் திறன் கொண்டவர்களைத் தேடுவது மிகப் பெரும் சவால்” என்று கூகுள் கிளவ்டு நிறுவனத்தின் ‘சொலுஷன்ஸ் ஆர்க்கிடெக் சர்’ தலைவர் ரோடி கூறியது விவாதத்தை கிளப்பியிருக்கிறது. “கற்றுத்தருவதை இந்தியர்கள், மூளையில் ஏற்றிக்கொள்வார்கள், வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று ‘ஆப்பிள்' இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ் கூறியிருந்ததன் தொடர்ச்சி இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT