Published : 23 May 2018 10:05 AM
Last Updated : 23 May 2018 10:05 AM

லேஸ் எனும் ஆபத்து!

ஹவாய் தீவிலுள்ள புனா அனல்மின் நிலையத்தின் அருகே எரிமலை வெடித்துச் சிதறும் புகைப்படம் இது. கடந்த சில தினங்களாக நிகழ்ந்த தொடர் எரிமலை வெடிப்பினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது ஹவாய் தீவு. 300 அடி உயரத்துக்கு எரிமலையும், 10,000 அடி உயரத்துக்குப் புகையும் எழும்பியிருக்கின்றன. சுமார் 4,000 சதுர மைல் நிலங்கள் இந்த எரிமலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர்ந்த கடல் நீருடன் 2,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் எரிமலை மோதிக்கொள்ளும்போது ஹைட்ரோகுளோரிக் அமில நீராவியும், எரிமலைத் துகள்களும் கலந்த ‘லேஸ்’ எனும் ஆபத்தான வேதிப்பொருள் உருவாகும். தீவின் சில பகுதிகளில் கடல் நீருடன் எரிமலைக் குழம்புகள் கலக்கத் தொடங்கியிருப்பதால், 300 மீட்டர் தொலைவு வரையிலான மக்களை வெளியேற்றியிருக்கிறார்கள். இன்னும் சக்திவாய்ந்த பெருவெடிப்புகள் எதிர்வரும் நாட்களில் உருவாகக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x