Published : 26 Apr 2018 09:18 AM
Last Updated : 26 Apr 2018 09:18 AM
ஒடிஷாவின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான பலாங்கிரைச் சேர்ந்த மக்களை இப்போதே தண்ணீர்ப் பற்றாக்குறை வாட்டியெடுக்கிறது. கோடைகாலத்தின்போது 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பதால், இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான நதிகளும் பிற நீர்நிலைகளும் வறண்டுவிடுகின்றன. நிலத்தடிநீரும் போதிய அளவில் இல்லை. மகாநதியில் தண்ணீர் வரத்து குறைந்திருப்பதற்கு சத்தீஸ்கர் பாஜக அரசும் மத்திய அரசும்தான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக். நதியின் குறுக்கே தடுப்பணைகளை சத்தீஸ்கர் அரசு கட்டிவருவதுதான் முக்கியப் பிரச்சினை என்கிறார் அவர். வறண்டு கிடக்கும் நதியில் எஞ்சியிருக்கும் தண்ணீரை எடுத்துச் செல்கிறார்கள் கிராமவாசிகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT