Published : 17 Jun 2018 03:28 PM
Last Updated : 17 Jun 2018 03:28 PM

நெட்டிசன் நோட்ஸ்: தந்தையர் தினம் - ‏"என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்"

சர்வதேச தந்தையர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையடுத்து நெட்டிசன்கள் தங்களது அன்பான வாழ்த்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ரோமியோ

‏இங்க பாசத்த பொழியிறது அவங்களுக்கு எப்டி தெரியுமோ.. 

இஷ்டத்துக்கு டீ ஆத்தாம உண்மையா பாத்துகோங்க

பாண்டி பிரகாஷ்

‏உறவென்ற உணவெல்லாம் விஷமானாலும், நமக்கு உயிர் கொடுத்த தந்தையே அதற்கு மருந்தாவார்..

கடைநிலை ஊழியன்

‏சத்தை எளிதில் உணர்ந்துவிடுகிறோம் ,

தந்தையின் பாசத்தை உணர நமக்கு சற்று முதிர்ச்சி தேவைப்படுகிறது ,

தந்தையின் பாசம் ஆழத்தில் இருப்பதால் !!

லதா கார்த்திகேசு    

‏தன்னை இழந்து 

என்னை செதுக்கும்

தியாக செம்மல்

நவீணா

‏கையில் வாங்கிய போதும்..

கைப்பிடித்து அழைத்து சென்ற போதும்..

கணவன் கைப்பிடித்து தந்த போதும்..

மனதால் மகிழ்ச்சி கொண்டு..

என்னை பெருமிதம் கொள்ள செய்தாய் நீ..

தந்தையாய் உனை..

நான் பெறவே..

என்ன தவம்..

செய்து விட்டேன்..

செல்வமணி

‏விரல் பிடித்து கூட நடந்திருப்பாரா என தெரியவில்லை,

நான் வளர்ந்த இந்நாள் முதல் உடல் நல்லா இருந்தா ஓய்வென்பதே இல்லை அந்த கடவுளுக்கு..

ஆம்!

தந்தையெனும் கடவுள் தான் அப்பா

அழகியல்   

‏பெண்களுக்கு வாழ்க்கையில மிக முக்கியமான உறவு அப்பா

அவர இழந்து தவிக்கிற பெண்களுக்கு தான் அவர் அருமை அதிகம் தெரியும்

ஒரு சின்ன பிரச்சனை வந்தாலும் அப்பா இருந்தா  நம்மல இதுல இருந்து காப்பாதிருபாங்கனு தோனும் அப்படி பாதுகாப்பான உணர்வு அப்பா கிட்ட இருந்து தான் கிடைக்கும்...

B.uma maheshwari   

‏வீட்டில் இருக்கும் எல்லோருடைய நம்பிக்கைக்கு

அச்சாரமாகவும் ஆசானாகவும் வாழ்ந்துகொண்டு இருப்பவர்

அப்பா

ராக்ஸ்டார்     

‏எதற்கும் எடுத்துக்காட்டாய் இருப்பதிலும் எதை கேட்டாலும் வாங்கி தருவதிலும் ஒரு உன்னதமிக்க மனிதர் தான் நம் தந்தை!!

சூர்(ப்)பனகை

‏பிறந்த

முதல் நாளிலிருந்தே

பார்த்திருந்தாலும்

முப்பது வயதுக்கு

பிறகே

புரியதொடங்கும்

அன்பு..!

கடைநிலை ஊழியன்

‏இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில் தன் குடும்பத்திற்காகவோ இரவு பகல் பாராமல் உழைப்பவர் தந்தை

SHIVA SWAMY.P

‏கூடவே வராத வழிகாட்டி,

குடும்பத்தின் பாதுகாவலன்,

சத்துணவு கொடுத்த முதல் கடவுள்,

பொது அறிவின் பிறப்பிடம்,

ஆராதனையின் அஸ்திவாரம்,

எரிபொருள் பயன்படுத்தாத ஒளிவிளக்கு,

மொத்தத்தில் Real Hero

Archana

‏வறட்டு கவுரவம் பார்ப்பவராகவும்

முன் கோபக்காரராகவும்

தோன்றும் அப்பாவின் குழந்தை மனமும்,

எதிர்பார்பற்ற பாசமும்

பலநேரங்களில் பிள்ளைகளால் உணரப்படுவதே இல்லை.

அப்பாவை அசட்டை பண்ணாமல்

அப்பாவுக்கான மரியாதை அங்கீகாரம் அளிக்க

கவனமாக இருப்போம்!

 Kopitha  

‏இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாரே என ஒரு நடிகனை புகழ்பவர்கள் - ஏனோ இந்த வயதிலும் இவ்வாறு உழைக்கிறாரே என ஒரு தந்தையை கூறியதில்லை

Jenish

‏தியாகங்கள் பல கலந்த நல்வளர்ப்பிற்கு கோடி நன்றிகளுடன்

உள்ளூராட்டக்காரன்

‏மகிழ்ச்சி, துக்கம்.. இரண்டையுமே முழுமையாக வெளிப்படுத்த தெரியாத 'அப்பா'வி..!

யாழினி♡†Ѧℓкs

‏நல்ல அப்பாக்களை கொண்ட மகள்கள் தோற்பதில்லை ,, வாழ்க்கையில் எந்த தருணத்திலும் எதற்காகவும் !!

எப்பவுமே தனுஷ் தான்

‏எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை.. ஆனால், எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாக  தான் வளர்க்கப்படுகிறார்கள்..

உழவர் மகன்     

‏என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x