Published : 05 Jul 2016 05:27 PM
Last Updated : 05 Jul 2016 05:27 PM

யூடியூப் பகிர்வு: பஞ்ச தாயம்பகம்- கேரளத்தின் இசைமுகம்!

கேரளத்தின் பாரம்பரிய தாள வாத்திய இசைக் கருவி 'மிழவு'. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பானையின் மேல், இறுக்க மூடப்பட்ட காப்பர் ட்ரம்களால் ஆனது. இது பாரம்பரியக் கலைகளில் முக்கிய பின்னணி வாத்தியமாக இசைக்கப்படுகிறது.

கேரளாவின் பழமையான நாடக வடிவம் 'கூடியாட்டம்'. இதில் 'மிழவு' கருவி பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் 'மிழவு' மூலம் தனியாக இசைக்கும் வடிவத்தை 'தாயம்பகம்' என்கின்றனர். இக்கலையை முதலில் குரு வாசிக்க, அவரைப் பின்பற்றி மற்றவர்கள் வாசிப்பர்.

'மிழவு' கலையில் இருந்து 'தாயம்பகம்' கலையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர் பி.கே. நாராயணன் நம்பியார். 'மிழவு' என்பது வேகத்தோடு கூடிய தனிநபரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது.

கேரளத்தின் இரிஞ்சலகுடா பகுதி உள்ளூர் திரையரங்குகளில், ஐந்து மிழவு கலைஞர்களைக் கொண்டு 'பஞ்ச தாயம்பகம்' இசைக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தின் இசையொளியைக் காண: