Published : 30 May 2017 02:49 PM
Last Updated : 30 May 2017 02:49 PM

யூடியூப் பகிர்வு: தாயின் தாலாட்டு- உறங்கவைக்கும் உன்னதப் பாடல்!

தாய், அவளைப் பற்றிய அறிமுகம் தேவையா, அவளின் அன்பைச் சொன்னால்தான் புரியுமா என்ன? ஆரிரோ என்று தாயிடம் தாலாட்டு கேட்டு வளர்ந்த நமக்கு, தாலேலோ, தந்தனத் தாலேலோ என்னும் வார்த்தைகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.

சாமரம் வீசுவேன்

சந்தனப் பூவாலோ...

மென்மலரே மின்மினியே

என்விழியின் செஞ்சுடரே...

என நீளும் பாடல் வரிகள் அனைத்திலும் தமிழ் விளையாடிச் செல்கிறது.

நடிக்காமல் வாழ்ந்திருக்கும் குழந்தையின் ஆடும் நாசியும், பொக்கை வாயும், பேசும் கண்களும் காணொலியை அதிகம் உயிர்ப்பானதாய் மாற்றியிருக்கின்றன.

உறுத்தாத மெல்லிசையோடு, பாடும் குரலினூடே இழையோடும் காந்தம் கேட்கும் நம்மையும் உறக்கத்துக்கு அழைத்துச் செல்கிறது. கேட்கக் கேட்கப் பிடிக்கும் தாலாட்டுப் பாடம் இது!

காணொலியைக் கேட்கவும், காணவும்...